நச் கதை..!
சாலை ஓரமாக நின்றிருந்தேன். ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் தடதடவென என்னைச் சூழ்ந்துகொண்டது. எல்லோரது கையிலும் ஆயுதங்கள். என்னைக் குறிவைத்துதான் வந்திருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அந்த வழியாகப் போகிற யாராவது எனக்கு ஆதரவாக உதவிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தேன். எல்லோரும் ஏதோ சினிமா ஷூட்டிங் போல வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள். ஒருவன் என்னை எட்ட இருந்தே கயிற்றை வீசி இழுந்தான். இன்னொருவன் என்னை ஓங்கி வெட்டினான்.
''அய்யோ! இப்படி அநியாயம் பண்றீங்களேடா... விடுங்கடா!'' என்று கத்தினாள் ஒரு பாட்டி. ''சும்மா கத்தாதேமா... ஒரு கோடி ரூபா ப்ராஜெக்ட்டு! இந்த ரோடை அகலப்படுத்த திட்டம் போட்டா... நந்தி மாதிரி குறுக்கே இடஞ்சல் பண்ணா இதான் கெதி!'' என்றவன் உரக்கக் கத்தினான், ''சீக்கிரம் வெட்டிச் சாய்ங்கடா அந்த மரத்தை!''
--விகடன்
2017-09-25 10:58:07 by sekar