ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை,
விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்,
அதாவது, 6வது நூற்றாண்டிலேயே புதையனார் என்ற தமிழர்
செங்கோன முக்கோணத்தில்
கர்ணத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் எளிய வழியைக் கண்டறிந்தார்.
அவர் எழுதிய கணிதப் பாடல்.
"ஓடிய நீளந்தன்னை
ஓரெட்ட்டுக் கூறதாக்கி
கூறிலே ஒன்று தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால்
வருவது கர்ணம்தானே".
**************************************
அதாவது பிதாகரஸ் தேற்றம்:
A² + B² = C²
3^2 + 4^2 = 5^2
9 + 16 = 25
25 = 25
C=5
**************************
இனி, புதையனாரின் சூத்திரம்:
ஓடிய நீளந்தன்னை - கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அளவுகளில்
பெரிய அளவை,
ஓரெட்ட்டுக் கூறதாக்கி - எட்டு பாகங்களாக்கி,
கூறிலே ஒன்று தள்ளி- அதிலிருந்து ஒரு பாகத்தைக் கழித்து,
( பெரிய அளவான 4 ஐ எட்டு பாகங்களாக்கி, /அதிலிருந்து
ஒரு பாகத்தைக் கழித்தால் வருவது மூன்றரை.
குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம்தானே.-
குன்றம் என்பது கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு அளவு.
மற்றொரு அளவு மூன்றில் பாதி ஒன்றரை.
இதனுடன் ஏற்கனவே கணக்கிடப்பட்டு மீந்த
அளவான மூன்றரையையும் சேர்த்தால் கிடைப்பது ஐந்து.
C=5
”தமிழன் மிகப் பெரியவன்...”
2017-02-21 13:20:31 by sekar